search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜின் விபத்து"

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை என்ஜின் மோதியதால் ரெயில் தடம் புரண்டது. 11-வது பிளாட்பாரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
    தாம்பரம்:

    கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் பராமரிப்பு பணிக்காக தாம்பரம் பகுதியில் உள்ள மூன்றாவது முனையத்திற்கு ரெயிலை கொண்டு சென்றனர். அந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் 11-வது பிளாட்பாரத்தில் நிறுத்தி இருந்தனர்.

    எக்ஸ்பிரஸ் ரெயிலை பின்புறமாக இழுப்பதற்காக டீசல் என்ஜினை ஊழியர் ஒருவர் ஓட்டி வந்தார். டீசல் என்ஜின் வழக்கத்தைவிட சிறிது வேகமாக வந்ததாக தெரிகிறது.

    இதனால் எக்ஸ்பிரஸ் ரெயிலின் அருகே நிறுத்த முடியாமல் ரெயிலின் கடைசி பெட்டி மீது என்ஜின் பயங்கரமாக மோதியது. இதில் ரெயில் பெட்டி சேதமடைந்தது. மேலும் அந்த பெட்டியின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அபாய சங்கு ஒலியை எழுப்பினர். இதனால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட ரெயில் பெட்டியை மீட்டனர்.

    பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பராமரிப்புக்காக முனையத்துக்கு கொண்டு சென்றனர். விபத்து ஏற்பட்ட இடத்தை ரெயில்வே அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    11-வது பிளாட்பாரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் ரெயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. . #Train

    ஈரோடு:

    ஈரோடு வழியாக பெங்களூருக்கு ஆயில் ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

    அதே நேரத்தில் எதிர் திசையில் மற்றொரு தண்ட வாளத்தில் குட்ஷெட்டில் இருந்து பணிமனை நோக்கி ஒரு ரெயல் என்ஜின் இயக்கப்பட்டது.

    எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் மீது என்ஜின் திடீரென மோதியது. இதில் பணிமனை நோக்கி சென்ற ரெயில் என்ஜின் தடம் புரண்டது. இதில் அந்த என்ஜினில் உள்ள ஏணிப்படிகள் உடைந்து சேதமடைந்தன.

    என்ஜினின் வலதுபுற மேல் பகுதி சேதம் அடைந்தது. ஆனால் பெங்களூரு நோக்கி சென்ற சரக்கு ரெயிலுக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை.

    ஆயிலை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரெயில் வேகமாக மோதி இருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக அது நடைபெறவில்லை.இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்துவதற்காக ஹைட்ராலிக் ஜாக்கி என்னும் நவீன கருவி துணையுடன் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து நடந்த இடத்துக்கு ரெயில்வே உயரதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×